சென்னை கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 72வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், சென்னை கோட்டையில் முதல்வர் எடுப்பாடி பழனிசாமி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவை முன்னிட்டு, தலைமை செயலகம் முழுவதும் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பொலிவாக காட்சி அளித்தது. இன்று காலை 9 மணியளவில் கோட்டைக்கு விரைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுமார் 9.15 மணிக்கு கொடி ஏற்றினார். பின்னர், முப்படை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவில், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., க்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

More News >>