25 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது: முழு விவரம் உள்ளே

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள விருது பெறும் போலீசாரின் விவரம் இதோ..

1. எம்.என்.மஞ்சுநாதா-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. காவலர் வீட்டு வசதி வாரியம்.

2. கே.பி.சண்முகராஜேஸ்வரன்-தென் மண்டல ஐ.ஜி. மதுரை.

3. எஸ்.திருநாவுக்கரசு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு துறை.

4. பி.விஜயகுமாரி-சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர்.

5. எம்.பாண்டியன்-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டு.

6. எஸ்.ராஜேந்திரன்-சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர்.

7. எஸ்.முத்துசாமி-சென்னை பரங்கிமலை துணை கமிஷனர்.

8. பி.பகலவன்-சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்.

9. எ.முகமது அஸ்லாம்- துணை போலீஸ் சூப்பிரண்டு காஞ்சீபுரம் மாவட்டம்.

10. ஆர்.விஜயராகவன்-திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு.

11. எஸ்.ஆனந்தகுமார்-கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு.

12. டி.பாலமுருகன்-சென்னை கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு.

13. டி.சேகர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை சூப்பிரண்டு.

14. எம்.குமரகுருபரன்-சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

15. ஐ.சுப்பையா-நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

16. கே.ராமச்சந்திரன்-திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு.

17. எஸ்.முத்துவேல் பாண்டி- சென்னை நுங்கம்பாக்கம், உதவி கமிஷனர்.

18. பி.ஸ்டீபன்-சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்.

19. ஜி.தேவராஜ்-பெரம்பலூர் இன்ஸ்பெக்டர்.

20. எ.அண்ணாமலை-சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்.

21. பி.ராஜாராம்-சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்.

22. கே.பி.லாரன்ஸ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, சென்னை.

23. இ.முனுசாமி-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு.

24. எஸ்.ஜெ.உமேஷ்-தலைமை காவலர், மாநில உளவுப்பிரிவு, சென்னை.

25. எஸ்.ஜஸ்டின் ராஜ்-துணை போலீஸ் சூப்பிரண்டு. எஸ்.சி., எஸ்.டி. கண்காணிப்பு பிரிவு, மதுரை.

இவர்களை தவிர, தமிழக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதியழகன் தீத்தன், தனசேகரன் சிகாமணி, டிரைவர் வெள்ளச்சாமி சுப்பிரமணியன், தீயணைக்கும் படை வீரர் செல்வமணி ஞானகண்ணு ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

More News >>