மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்

உடல்நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாயின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, முக்கிய அரசியல் பிரமுகர்கள் போனிலும், நேரிலும் சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, பிரதமர் மோடி, அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர்.

More News >>