நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!

கனமழை, வெள்ளத்தால் நிர்மூலமான கேரள மாநிலத்திற்கு நடிகர் விஷால் பத்து லட்சம் ரூபாய் நிதயுதவி வழங்கினார்.

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பேய்மழை பெய்துவருகிறது.1924ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் இந்த மழை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவரான மம்மூட்டி, அவருடைய மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உள்பட பலர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதேபோல், தென்னிந்திய நடிகர் சஙகம்,நடிகர்கள் கமல் ,சூர்யா,கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர். பல்வேறு தன்னார்வ அமைப்பு, தொண்டு நிறுவனங்கள் கேரள மாநில அரசுக்கு நேசக்கரம் நீட்டி வருகிறது.

இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார்.

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும்,மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News >>