வாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் மிக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (93), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மறைவுக்கு, தமிழகம் உள்பட நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வாஜ்பாயின் உடல் கொண்டு வரப்பட்டடை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இவர்களை தொடர்ந்து, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

More News >>