கனமழை.. 324 பேர் உயிரிழப்பு... மீளா துயரில் கேரளா

கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.   வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.  வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளனர்.    அவர்கள் அனைவரும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை கேரளா அரசு வழங்கி வருகிறது.    மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதியில் மழை தொடர்வதால், ஒட்டு மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று, எதையுமே விட்டு வைக்காமல் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.   இந்நிலையில்,வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இதுவரை வெள்ளத்தில் சிக்கி 324 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் உள்ள 80 அணைகளிலும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது."    "100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை பெய்திருப்பதால், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்" கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More News >>