அநீதி வீழும் அறம் வெல்லும் - 2ஜி வழக்கு குறித்து கருணாநிதி

அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று 2ஜி வழக்கு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள திமுக தலைவர், "அநீதி வீழும்; அறம் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>