வெனிசுலா நாட்டில் 7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

வெனிசுலா நாட்டில் இன்று 7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டில் இன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவு கோலில் பதிவானது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களைவிட்டு சாலையில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் இதுவரையில் வெளியில் வரவில்லை.

More News >>