ராஜீவ் காந்தி மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் 6வது மாடியில் இருந்து இஞ்சினியரிங் மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராஜீவ் காந்த அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை 7.45 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென டவர் பிளாக்&2 கட்டிடத்தின் 6வது மாவடிக்கு சென்று, அங்கிருந்து கார் பார்க்கிங் பகுதியில் திடீரென குதித்தார். இதில், வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வாலிபரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், வாலிபர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து விசாரித்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட வாலிபர் ஒடிசாவை சேர்ந்தவர் என்றும் புவனேஸ்வரில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படிப்பு படித்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், புவனேஸ்வரில் இருந்து கடந்த 20ம் தேதி சென்னை வந்த வாலிபர் இங்கு வந்து தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>