பாந்த்ரா ரயில் நிலைய உணவகத்தில் தீ விபத்து

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பாந்த்ரா பகுதி ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் அங்கு உணவு சாப்பிடுவார்கள். இந்நிலையில், இன்று அதிகாலை வழக்கம்போல் பயணிகள் சிலர் மின்சார ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த உணவகத்தில் திடீரென தீ பற்ற எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். மேலும், நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த பயணிகளும் அலரியடித்துக் கொண்டு ஓடினர்.

தீவிபத்து குறித்து ரயில் நிலைய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கொழுந்துவிட்டு எரிந்த தீயை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News >>