பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

பாகிஸ்தான், சியால்கோட் பகுதியில் 1923ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகராகவும் தனது பணியை தொடங்கி பிரபலமானார்.

இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா சபையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

மேலும், இவர் எல்லைகளுக்கு இடையே, தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை, நேருவுக்குப் பிறகு இந்தியா, ஸ்கூப் போன்ற பிரபல புத்தகங்கள் உள்பட 11 புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்.

குல்தீப் நய்யாருக்கு 95 வயது ஆகும் நிலையில், வயது முதிர்வால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குல்தீப் நய்யார் மரணமடைந்தார். குல்தீப் நய்யாரின் மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News >>