சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்

கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக ஊரெல்லாம் மூழ்கிக்கிடக்கும் அவல நிலையை மையமிட்டு ஏ.ஆர்.ரகுமான் பாடப்பட்ட பாடல் 'கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா... ' என்ற பாடலை பாடினார்.

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பக்கத்து மாநிலங்களில் இருந்து உதவிக் கரங்கள் நீட்டுகின்றன. தமிழகத்தில் இருந்து நிவாரண உதவித்தொகைகளும், பொருட்களும் குவிகின்றன. தமிழ் நடிகர்–நடிகைகள் நிவாரண உதவி தொகை வழங்கி வருகின்றன. இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அப்பொழுது 'லாஸ் ஏஞ்சல்ஸ்' நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா.. முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார்.

முஸ்தபா என்ற வார்த்தைக்கு பதிலாக ‘கேரளா.. கேரளா.. டோன்ட் ஒர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா..’ என்று பாடினார். இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இப்படி அவர் பாடியதன் மூலம் கேரள மக்களின் துயரம் நிலையை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News >>