கேரளாவில் விஷ ஊசி போட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

கேரளாவில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பொன்குன்னம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (38). இவரது மனைவி மனு (32). இவர்களுக்கு, மணிக்குட்டி (10), உன்னிகுட்டி (5) என இரண்டு மகள்கள். இவர்களுடன் பிஜூவின் தாய் பொன்னம்மாள் (65) வசித்து வந்துள்ளார். பிஜூ பாலா நகரில் உள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிஜூ நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய பிஜூவிற்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பிஜூ வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இறந்து கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிஜூ செய்வதறியாமல் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில், விஷபாட்டிலும், ஊசியும் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். இதனால், அனைவரும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர் என்பது தெரியவந்தது.

பின்னர், நான்கு பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், பிஜூவின் குடும்பத்தினர் கந்துவட்டி வாங்கியதாகவும், இதனை கேட்டு கந்துவட்டி கும்பல் 3 பேர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்து போன மனு, குழந்தைகள் மற்றும் மாமியாருடன் விஷ ஊட்டி போட்டு தற்கொலை கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.

கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>