உடல்நலம் தேறிய அருண் ஜெட்லிக்கு மீண்டும் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு

மூன்று மாத காலம் ஓய்வில் இருந்த அருண் ஜெட்லி, மீண்டும் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சுமார் 3 மாதம் ஓய்வில் இருந்தார். இதனால், மத்திய நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு பதிலாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல்நலம் தேறிய அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கான ஆணைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சரர் பொறுப்பு அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது.

More News >>