கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி தீவிர சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது உடல் மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்குல தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக் கொள்ள திமுக முன்னாள் எம்.பி.டி.ஆர் பாலு, ஸ்டாலின் ஆகியோர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

More News >>