சின்னத்திரை டூ பெரியத்திரை.. ஹீரோவாகும் விஜய் டிவியின் அடுத்த பிரபலம்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ, தற்போது ஹீரோவா பெரியத்திரையில் கலக்க தயாராகிவிட்டார். அதுவும் யார் தயாரிப்பில் தெரியுமா ?

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி, ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரியோ.சமீபத்தில் தான், சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்தது. இந்நிலையில், ரியோ சின்னித்திரையில் இருந்து பெரியத்திரைக்கு சென்று, அதுவும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் கனா. இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தான் தயாரிக்கும் பெயரிடப்படாட புதிய படத்தில் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பெரியத்திரைக்கு சென்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, ஹீரோவாக நடிக்க வாய்ப்பு அளித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் ரியோ.

More News >>