ஈரான், ஈராக்கில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

ஈரான், ஈராக்கில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஈரான், ஈராக் பாக்நாத் நகர் மற்றும் ஈரான் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால், பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News >>