வில்வித்தை போட்டியில் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் கலந்துக் கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இதில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வில்வித்தையில் பங்குபெற்று இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் பெற்றுத்தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

More News >>