பிறந்தநாளன்று புதிய இயக்கத்தை தொடங்கிய விஷால்

பிறந்தநாளன்று நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பையும் தாண்டி அரசியலில் களமிறங்க தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த விஷாலுக்கு நேர்ந்த சோகம் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும், தமிழகத்தில் நடந்துவரும் பிரச்னைகளில் தலையிட்டு அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார். சினிமாவில் கமல், ரஜினிக்கு பிறகு அரசியலில் விஷால் தீவிரம் காட்டுகிறார். அதற்கான பணிகளையும் தொடங்கிவிடடார்.

நடிகர் விஷால் தனது பிறந்தநாளை இன்று கொண்டிய நிலையில் ரசிகர்களுக்கு பிறந்த நாள் நற்செய்தியாக சண்டைகோழி-2 படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 18 என்று அறிவித்தார். அத்துடன் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாக விஷால் தெரிவித்தார். மேலும், அதற்கான கொடியையும் விஷால் தெரிவித்துள்ளார்.

More News >>