சென்னையில் விடிய விடிய லேசான மழை: வெப்பம் தணிந்தது

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய வடிய பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்துள்ளது.

பிற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், சென்னையில் வெயில் வறுத்தெடுத்து வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், சேத்பட்டு, அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

More News >>