மெக்சிகோவில் பேருந்து மீது லாரி மோதி 4 பேர் பலி பலர் கவலைக்கிடம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது நியூ மெக்சிகோ நகர் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. பேருந்தில் பயணித்த 49 பேரில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

More News >>