ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி இன்டோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய இரண்டு வீரர்களுக்கும், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

More News >>