உடல்நலக் குறைவால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த சில நாட்களாக உடல் சோர்வு, தூக்கமின்மை, உணவு ஒவ்வொமை ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் தாக்கம் நேற்று அதிகரித்ததை அடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு திருமாவளவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமாவளன் பூரணமாக குணமடைந்ததும் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அவரது தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

More News >>