உத்தரப்பிரதேசத்தில் கனமழை எதிரொலி 20 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடி, மின்னல் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ உள்ளிட்ட இடங்களில் கனமழையில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20 ஆக உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More News >>