சென்னை மெட்ரோ ரயிலில் விரைவில் வைபை வசதி

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விரைவில் வைபை வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் உருவாகி வருகிறது.

இந்த மெட்ரோ ரயில்களில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும், பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் ஆட்டோ வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. இதற்கான செயலியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிக்கும் நேரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், பயணிகள் செயலி மூலம் எச்டி தரத்துடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்” என்று தெரிவித்தார்.

More News >>