சென்னை விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் தரையிறங்கியது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த சாகீப் அகமது (36) என்பவரது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர். அதில், செம்பு கம்பிகளுக்கு பதிலாக, தங்க கம்பிகள் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, சாகீப் அகமதுவிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 155 கிராம் தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த காளிதாஸ் (39) என்பவரின் உடைமைகளை சோதனை செய்ததில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதை அடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>