தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத்

தமிழகம் முழுவதும் இன்று, மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேசிய அளவில் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது.

இதில், செக் மோசடி வழக்குகள், தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகளும் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில், 10 அமர்வுகளும், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகளும் உள்பட, தமிழகம் முழுவதும், 447 அமர்வுகளில், 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

More News >>