ஒரு நாயகன் உதயம் ஆகிறான்.. கதாநாயகனாகும் யோகிபாபு

சின்னத்திரையில் அறிமுகமான யோகிபாபு பல கஷ்டமான தருணங்களை கடந்து தற்போது தனக்கென ரசிகர்களை சம்பாதித்துள்ளார். காமெடியில் கலக்கி வரும் நிலையில், யோகிபாபு மிக விரைவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, இவர்கள் வரிசையில் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்ட காமெடி நடிகர் யோகிபாபு.

இந்நிலையில் யோகிபாபுவை வைத்து படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார் டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன். இவர் இயக்கவுள்ள முழுநீல காமெடி திரைப்படம் ஒன்றில் யோகிபாபுவை நடிக்க வைக்க முடிவு செய்து யோகிபாபுவிடம் கதை சொல்லி அவரின் சம்மதத்தை பெற்றுள்ளார் சாம். இந்த முழு நீல நகைச்சுவை கதைக்கு யோகிபாபு மட்டுமே பொருத்தமானவர் என்றும் கூறியுள்ளார் சாம்.

சாம் ஆண்டன் சொன்ன கதை பிடித்துவிட்டதால் உடனே சம்மதித்துவிட்டார் யோகிபாபு. குறுகிய காலத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள யோகிபாபு, தற்போது பிஸியாக கை விரலில் எண்ணமுடியாத அளவிற்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More News >>