மனைவியின் தலையை வெட்டி கையில் கொண்டுவந்த கணவன்

கர்நாடக மாநிலத்தில் மனைவியின் தலையை கணவனே வெட்டி கொண்டுவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் Tarikere தாலுகாவில் உள்ள ஷிவானி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள், சதீஷ்(35)-ரூபா(28). இருவருக்கும் திருமணம் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், சதீஷ் வீட்டின் அருகே உள்ள ஒரு காவல்நிலையத்தில் துணிப் பையுடன் சென்று சரணடைந்துள்ளார்.

அந்த துணிப்பையை துறந்துப் பார்த்த காவல்துறையினர், ஒரு பெண்ணின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்பின் சதிஷிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், “ரூபா என்னை ஏமாற்றிவிட்டாள். அவள் வேறொருவடன் தோட்டத்தில் இருப்பதை நான் பார்த்துவிட்டேன்.

அவன் தப்பி ஓடிவிட்டான். கையில் சிக்கிய இவளின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>