பெரியாரின் மண்ணை பாஜக ஆள்கிறது- கனிமொழி பகீர்

பெரியாரின் மண்ணை அதிமுக மூலம் பாஜக ஆட்சி செய்து வருவதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு சென்னையில் நேற்று புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் மு.க.கனிமொழி பேசுகையில், “தமிழகத்தை 400 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

பெரியாரின் சுயமரியாதை மண்ணை அதிமுக மூலம் பாஜக ஆட்சி செய்து வருகிறது” என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக-வுடன் திமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கூறி வரும் நிலையில் கனிமொழியின் இந்த பேச்சு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

More News >>