காம உணர்வை அதிகமாக்கும் உணவுகளின் பட்டியல்

காலத்தைக் கணக்கிட முடியாத முன்னரே, இவ்வகையான  உணவு வகைகள் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு, காமத்தைப் பெருக்கி இன்பத்தை அதிகரிக்கச் செய்வதில் மிகச் சிறந்த ஆற்றலுடையதாக திகழ்ந்துவருகின்றன. அவை எந்த உணவுகள் என்று பார்ப்போம்.

ஒயின் குடிப்பதால் நம்முடைய காம உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களின் காம உணர்வுகளையும் மிகவும் நன்றாகத் தூண்டுகிறது.

வாழைப்பழம் ஆணுறுப்பைப் போன்ற இதனுடைய உருவம் மட்டுமின்றி, இதில் பல்வேறு சிறந்த தன்மைகள் அடங்கியுள்ளன வாழைப்பழத்தில். வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. குறிப்பாக இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை காம ஹார்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்கச் செய்கின்றன.

பூண்டு இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆணுறுப்பினை விரைப்படையச் செய்யும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவகோடா ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குமே காம உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகோடா. இப்பழத்தில் பீட்டா கரோட்டின், மக்னீ சியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்தது. இவை அனைத்தும் மனிதர்களின் காம உணர்வைத் தூண்ட வல்லவை.

அத்தி பழங்காலம் தொட்டே, அத்திப்பழமானது  இனப்பெருக்கத்தோடு தொடர்புடையதாகவே இருந்தது. அத்தி ப்பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே காம குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை.

சாக்லெட் ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. இவை நமது உணர்ச்சிப் பெருக்கினையும், ஆற்றல் நிலையையும் கூட்டுகின்றன. இதனால், நாம் சாக்லெட் சாப்பிடும் போது, நமது உணர்ச்சிப்பெருக்கும், ஆற்றல் நிலையும் உயர்ந்து, நமது காம உணர்வு தூண்டப்படுகிறது. ஃபீனைல் எத்திலமைன் உடன் அனன்டாமைடு என்னும் வேதிப்பொருள் சேர்ந்து, பாலுறவின்போது, உச்சக்கட்டத்தை அடைவதில் உதவுகின்றன.

மிளகாயின் காரத்தன்மையினால் உடலினை சூடேற்றி, இது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான்.

மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. ஒருவரது காம உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

More News >>