தொடர்ந்து எகிறும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றம் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத உச்சத்தை பெட்ரோல், டீசல் விலை எட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் பல நடந்தும், விலை குறையவில்லை.

இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் வேதனையடைந்து உள்ளனர்.

சென்னை பொருத்தவரை, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.49 விற்பனையானது. இதேபோல், டீசலின் விலை 24 காசுகள் உயர்ந்து ரூ.77.49 காசுகளுக்கு விற்பனையானது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனையில் புலம்பி வருகின்றனர்.

More News >>