ஆசிய போட்டியில் பதக்கங்களை குவித்த வீரர்களுக்கு ரூ.4 கோடி பரிசு

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கவுரவித்தார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு தொகையை இன்று வழங்கினார்.

இந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரியத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாகவும், 11 பயிற்றுநகர்களுக்கு ரூ.51 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 21 லட்சத்திற்கான கோசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

More News >>