நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை

நடிகை நிலானி அளித்த புகாரால் மனம் உடைந்த காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, போலீஸ் சீருடையில் காவல்துறைக்கு எதிரான நடிகை நிலானியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலானி, தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது காதலனான வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார். திருமணத்திற்கு வற்புறுத்தி தகராறில் ஈடுபடுவதாக அவர் கூறினார். புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, நடிகை நிலானி அளித்த புகாரால் மனம் உடைந்த அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

More News >>