காமலாபுர விமான நிலையத்தில் புதிய விமானம்

சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம் அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி மத்திய அரசின் உடான்  திட்டத்தின் கீழ் ட்ரூ ஜெட் நிறுவனம் சென்னைக்கு சேவையை தொடங்கியது.

இந்த விமான நிறுவனமானது மாலை நேரத்திலும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. இதன்படி அடுத்த மாதம் 28ஆம் தேதி முதல் ட்ரூ ஜெட் நிறுவனமானது சென்னை-சேலம் இடையே மாலை நேர விமான சேவையை தொடங்க உள்ளதாக சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் இந்த விமானம் சேலம் விமான நிலையத்தை 5 மணி 10 நிமிடத்திற்கு வந்தடையும். இங்கிருந்து5.40க்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு சென்னை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>