நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் பலி

நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு இதுவரை 100 பேர் பலியாகி உள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சுமார் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

குறிப்பாக, கோகி, நைஜர், அனம்ப்ரா உள்ளிட்ட மாகாணங்களை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், நிவாரண பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வெள்ளம் வடிந்ததும் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News >>