25 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு 25 பேர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனிடம் நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் பதிவான சி.சி.டிவி காட்சிகளை 7 நாட்களில் சமர்பிக்க ஆணையம் உத்தரவிட்டது.

இந்த காலகெடு முடிந்துள்ள நிலையில் அவரை வரும் 25ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

மேலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய ஆஜராகுமாறு 25 பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

24 ஆம் தேதி:

மருத்துவர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, நளினி, சினேகா ஸ்ரீ, ரமாதேவி, ஷில்பா, செவிலியர்கள் பிரேமா ஆண்டனி, விஜயலட்சுமி, ஹெலனா, அலோக் குமார் பேங்க் ஆப் இந்தியா மேலாளர், எக்கோ டெக்னீசியன் நளினி.

25 ஆம் தேதி :

மருத்துவர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன், வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன், அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன்.

26 ஆம் தேதி :

மருத்துவர்கள் சுப்பிரமணியன், சஜன் கே ஹெக்டே, கே.ஆர்.பழனிசாமி, வி.என்.அருள்செல்வன், புவனேஷ்வரி சங்கர், பாபு மனோகர்

27 ஆம் தேதி

மருத்துவர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில்குமார், சாய் சதீஸ். ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.

More News >>