காவலாளியை சுட்டு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய சிறுவர்கள்

பீகார் மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் காவலாளியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு 5 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுப்படும் சிறுவர்களை இங்கு அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 5 பேர் தப்பித்து செல்ல முடிவு செய்து, காவலாளி மற்றும் சக சிறுவனை சுட்டுகொன்று விட்டு அங்கிருந்து தப்பினர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய 5 சிறுவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது, தப்பித்ததற்கான நோக்கம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

More News >>