எல்லையில் பதற்றம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார்?

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர்.

இதை தொடந்து இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.

இதையறிந்த பயங்கரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு, ராணுவத்தினரும் கடுமையாக பதிலடி கொடுத்தனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

More News >>