உணவு எப்படி சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

அவசர உலகில் எல்லாமே இப்போ அவசரம்தான். குழந்தைக் கூட குறைப்பிரசவமாக அவசரமாக பிறக்கின்ற காலச்சூழல். இந்நிலையில் நாம் உண்ணும் உணவுக் கூட அவசர உணவு தான். அதோடு அவ்வுணவை எப்படி உண்ண வேண்டும் என்று பெற்றவர்களுக்கும் தெரியவில்லை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க முடியவில்லை.

கவலை வேண்டாம். நாங்க இருக்கோம்ல சொல்லிக் கொடுக்க.

சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணிர் குடிக்க கூடாது. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் . டிவி பார்த்து கொண்டு சாப்பிட கூடாது. முடிந்த வரை பற்களால் மென்று தின்ன வேண்டும்.நாம் மென்று சாப்பிடும் போது நம் வாயின் உமிழ்நீர் உடன் செல்வதால் நன்கு செரித்து விடும் காலை உணவு 7 – 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை வயிறு செரிமானம் செய்வதால் கல்லை தின்றாலும் செரித்து விடும். மதியம் உணவு 1-3 மணிக்குள் சாப்பிட வேண்டும். சிறுகுடல் செரிமானம் செய்வதால் லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.சிறுகுடலை பொருத்த வரை கூழ் ஆனா உணவை விரைவில் செரிக்கும். இரவு உணவு 7-9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் இதயமேலுறை நேரம் என்பதால் எண்ணை பொருட்கள் சாப்பிட கூடாது. லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது தாகம் எடுத்தல் ஒரு சிறிய மூடி அளவு தண்ணிர் குடிக்கலாம். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான், தண்ணிர் நிறைய குடிக்கலாம். நாம் சாப்பிடும் போது உடலில் ஒரு வித அமிலம் சுரக்கும் தண்ணிர் குடித்தால் அது சுரப்பது நின்று விடும். இந்த அமிலம் இல்லை என்றாலும் உணவு செரிக்கும் ஆனால் சத்துகள் பிரியாமல் அனைத்தும் தங்கி விடும். இவை தான் உடலில் பெரிய நோயிகளை ஏற்படுத்தும். இந்த நோய்களின் முதல் காரணம் நாம் சாப்பிடும் முறைகள் தான். முறையான நேரத்திலும், முறையான முறையிலும் சாப்பிட்டு மருந்து இல்லா உலகை படைப்போம். இயற்கையை நோக்கி பயணிப்போம்.
More News >>