ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள ஜெயக்குமார், “அதிமுகவில் இருந்து ஒரு செங்கல்லை கூட யாராலும் அசைக்க முடியாது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். தினகரன், ஸ்டாலின் கூட்டுசேர்ந்து சதியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

மேலும், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து வருகின்ற 31ஆம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றார்.

More News >>