கொடைக்கானல், குன்னூர் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.    நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஏராளமான மலர்கள், மூலிகைகள் உள்ளன. அதே போன்று இமயமலை, நேபாளம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ராட்ச மரங்களில் காய்கள் காய்த்துள்ளதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இதேபோன்று, கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பில்லர் ராக், குணா குகை நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு குளுகுளு சூழலை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மேலும், குளிரையும் பொருட்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
More News >>