தாராபுரம் அருகே சோகம்: பேருந்து மோதி பாதயாத்ரீகர்கள் 5 பேர் பலி

திருப்பூர்: தாராபுரம், குப்பனங்கோவில் பகுதி அருகே இன்று அதிகாலை பேருந்து ஒன்று மோதியதில் பழனிக்கு பாதி யாத்திரையாக சென்றுக் கொண்டிருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் சிலர் பழனிக்கு பாத யாத்திரையாக சென்றுக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் தாராபுரம் அருகே குப்பனங்கோவில் பகுதி சாலையில் யாத்திரீகர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து திடீரென அவர்கள் மீது மோதியது.

இதில், திருப்பூரை சேர்ந்த நடராஜ், பரமேஸ்வரி, விஜயா, காளிமுத்து மற்றும் ராஜாமணி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து குறுத்து வழக்குப்பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

More News >>