இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 3 பாக்., வீரர்கள் பலி

ஜம்மு: கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த சனிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக நேற்று இரவு, ராவ்லாகோட் செக்டார் பகுதியில் உள்ள ராக்சிக்ரி அருகே எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை இந்திய ராணுவ உளவுப்பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது.

More News >>