ஓபிஎஸ் பதவி பயத்தால் அமைதியாக இருக்கிறார்?

ஓபிஎஸ் பதவி பயத்தால் அமைதியாக இருக்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்சையாகியுள்ளது.

தேனியில் நடைபெற்ற சுருளி சாரல் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பதவி நிரந்தரமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றாகத் தெரியும் என கூறியுள்ளார்.

அவர் பேசியது “ஓ.பன்னீர்செல்வம் பல பதவிகளை வகித்துள்ளார். முதல்வராக இருந்துள்ளார். தற்போது துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

அவர் இத்தனை பதவிகளைப் பெறுவதற்கு அவரின் தாய் தந்தை செய்த புண்ணியமே காரணம். அவருக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக உள்ளது. அவர் சொன்னால், பலருக்கு பதவி கிடைக்கும். ஆனால், பதவி நிரந்தரமில்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் அவர் அமைதியாக செயல்படுகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.

More News >>