மனைவியின் மீது கோபம்கொண்ட காதல் கணவனின் வெறிச்செயல்

சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே மனைவியின் மீது உள்ள கோபத்தில் அவர் வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவனை போலிசார் கைது செய்தனர்.

வேளச்சேரி சாரதி நகர் 3வது தெருவைச் சேர்ந்த ஜெகநாத் என்பவரும், அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்த செல்வி என்பவரும் கடந்த பிப்ரவரி மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

செல்வி, பரணி என பெயர் வைத்த நாயை நீண்ட நாட்களாக வளர்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு நாயை வளர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நாயை எங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடும்படி ஜெகநாத் கூறியுள்ளார்.

இதற்கு செல்வி மறுப்பு தெரிவித்ததோடு, ஜெகநாத்துடன் சண்டையிட்டுள்ளார். நாய்க்காக தன்னுடன் சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த ஜெகநாத் செல்வியை தாக்க முயன்றதால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜெகநாத் நாய் பரணியால் தான் செல்வி தன்னுடன் சண்டையிட்டதாக கருதிய அதனை கடுமையாகத் தாக்கி கொன்றுள்ளார். இதுகுறித்து செல்வி அளித்த புகாரில் ஜெகநாத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More News >>