ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டது

சென்னை: சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதனால், அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் வழக்கம் போல் இயங்கும் பட்டாபிராம் நோக்கி செல்லும் மின்சார ரயில் இன்று காலை கிளம்பியது. இந்த ரயில், ஆவடி ரயில் நிலையம் அருகே வந்துக் கொண்டிருந்தபோது ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்பரண்டன. இதை சுதாரித்துக் கொண்ட மின்சார ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டார்.

இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருந்தாலும், ரயிலுக்குள் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நடந்து வருவதால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

More News >>