வழக்கிற்கு சாட்சியாக சென்ற வாலிபர் வெட்டிக் கொலை? போலீஸ் வேடிக்கை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகரில் உள்ள அத்தாபூர் என்ற பகுதியில் இன்று மதியம் வாலிபர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். கொலை செய்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால், பொதுமக்களால் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தனர். மேலும், அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீசாராலும் தடுக்க முடியவில்லை. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், கொலை செய்யப்பட்டவர் குறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ரமேஷ்என்பதும், அவர் வழக்கு ஒன்றிற்காக சாட்சியாக ஆஜராக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் செல்லும் நடுரோட்டில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>