துப்பாக்கி தவறுதலாக வெடித்தது - இந்திய துணை தளபதி காயம்

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இந்திய விமான படை துணை தளபதி காயமுற்றார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமான படையின் துணை தளபதியாக இருப்பவர் ஏர் மார்ஷல் ஷிரிஸ் பாபன் டியோ. கடந்த ஜூலை மாதம் இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

நேற்று (புதன் கிழமை) இவர் தவறுதலாக தன்னை தானே சுட்டுக் கொண்டார். குண்டு பாய்ந்ததில் ஏர் மார்ஷலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. டெல்லியிலுள்ள ஆர்.ஆர். மருத்துவமனையில் துணை தளபதி டியோ அனுமதிக்கப்பட்டார். தொடை எலும்பில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தேசிய பாதுகாப்பு பயிற்சி நிலையத்தில் பயின்ற டியோ 1979ம் ஆண்டு போர் விமானியாக இந்திய விமான படையில் சேர்ந்தவராவார்.

More News >>