மாலியில் பயங்கரம்: வெடிகுண்டு வெடித்து 8 பேர் பலி

மாலி நாட்டில வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் ராணுவ வீரர்களுடன் பொது மக்கள் ஒருவர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், பொது மக்களும், ராணுவ வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இதுபோல், இன்று மாலி நாட்டில் ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 7 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொது நபர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து அந்நாடு விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு, எவ்வித பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தில் மேலும் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

More News >>